Friday, December 17, 2010

நேசி... நேசி... நேசி...

உருவம் மற-

கவர்தல் மற -
கனவு மற-

நேசிக்க முடியுமா?யோசி-

அழிதல் பற்றிய புரிதல்-
உன்னுள்ளே நிகழ்ந்தால்-
முடியும் எல்லாம் முடியும்-

நேசிக்க முடியும்.
நேசமும் முடியும்.

பெயர் பொருட்டல்ல-
குரல் பொருட்டல்ல-
குழைவு பொருட்டல்ல-
வெளியோடும் உயிரே உள்ளோடும்.


உள்ளும் புறமும் ஒரு புள்ளி.
நீ புள்ளி.

நான் புள்ளி.
நாம் புள்ளி.

அழித்தலும்,இணைத்தலும்
அவரவர் விருப்பம்-
விருப்பதால் இணையும்-
வெறுக்கத் தெரியாதது தனியே திரியும்-
எங்ஙனம் புள்ளிஅழியும்.?


நீ முந்தி-
நான் பிந்தி-
காலம் கணக்கிடும்-
பூஜ்யத்தில்

எது முந்தி-
எது பிந்தி-

நேசிப்பின் குரல் அடங்காது-
மௌனமாய் பிளிரும் -
மௌனத்தை

யார் அடக்க-யார் அடைக்க -
புகைத்தல் நெஞ்சுக்குள்-

எரிதல் பேச்சுக்கள்
-
எப்படிப் புகையடக்க -

எப்படிப் பேச்செரிக்க-

கனவை அறுத்துத் தூர எறி
கண்களை?
பிரியத்தைத் புதை-

ஞாபகம் வளர்-
நிஜத்தை?

ஒன்றுமில்லை-
எல்லாம் சரியே-
எல்லாம் தவறே-
சரிக்கும் தவறுக்கும்
சமமோ சமம்-
ஒன்றுமில்லை-

இழத்தல் யாருக்கு?
பெறுதல் யாருக்கு?
இழத்தலும் பெறுதலும்

இல்லை உயிருக்கு-

1 comments:

முல்லை அமுதன் said...

nantru.
paaraaddukal.
http://kaatruveli-ithazh.blogspot.com/